
செ
ஞ்சோலை தெருவெல்லாம்
புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே;
தமிழ் படித்த சிறுமியின் குரல்
சப்தம் தொலைத்து கிடக்கிறதே;
பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம்
மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே;
Feed Entries

செ
ஞ்சோலை தெருவெல்லாம்
புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே;
தமிழ் படித்த சிறுமியின் குரல்
சப்தம் தொலைத்து கிடக்கிறதே;
பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம்
மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே;

உன் பயணங்களின் ரகசியங்களெதுவும்
புரியவில்லையப்பா எனக்கு.
நேற்றென் கூட இருந்து
என் விரல்பிடித்து நடத்திப் போனாய்
உன் மார்புச்சூட்டில் முகம் புதைத்து
நானுறங்கிக் கிடந்தேன்
இன்று
நீயில்லாத வெறுமைகளோடு

பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக
நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து
வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும்
மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம்
இப்போதும் இருக்கிறது.
அதே தளராத உறுதி.
அதே உழைப்புக்கான ஊக்கம்.
அதே தன்னலமற்ற தியாகம்.

அரைவயிறு உணவுகளோடும்
அடையாள இலக்கங்களோடும் இருந்த
அகதி வாழ்வை முடித்துக்கொண்டு
நேற்று நாம் ஊருக்கு திரும்பி விட்டோம்.
அடிமை வாழ்வை ஆரம்பிக்க.

மேகங்களிடம்
நட்சத்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு
பொட்டில்லா காதலி முகமாய்
வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

நானொரு கறைபடாத நிலவு.
இன்று
அமாவாசையாகி நிற்கின்றேன்.
என் ஒற்றைச் சூரியனை
போர்ப் பாம்புகள் அழகான வானத்திலிருந்து
இழுத்துப் போய்
வெளிச்சமில்லாத சிறைப்புற்றுகளுக்குள் போட்டு
சிதை மூட்டியிருக்கிறதென் மனசில்.

அபிவிருத்தி செய்கிறது அரசாங்கம்.
அப்பா இல்லாத குழந்தைகளையும்...
ஆண்களில்லாத குடும்பங்களையும்...
அகழ்வாராய்ச்சி செய்கிறது அரசாங்கம்.
வீரர்களை விதைத்த துயிலுமில்லங்களை
கிளறியெறிந்து.

என் அப்பாவை ஒளி(ழி)த்த குற்றத்துக்காக
அவர்களை நோக்கி வருகிற
தூக்குக்கயிற்றின் வளையங்களுக்குள்
நாக்குத் தொங்கச் சாகப்போகிற
தீர்ப்புக்களிடமிருந்து
தன் சகாக்களை காப்பாற்றிக்கொள்வதற்காக
தலைமாட்டில் பிஸ்கற் பைக்கற்றோடு
உன் அப்பா
நேற்று உண்ணாவிரதமிருந்தார்.

சிரித்துக் கொண்டிருந்த
ஐந்து அழகான பூக்களைத் தாங்கிய
செழித்த செடியொன்றின் வேராயிருந்து
இன்று
மீதமிருக்கும் வாடிப்போன
என் மூன்று பூக்களோடு வந்துநிற்கிறேன்
வீட்டு முற்றத்தில்.
தொ ட்டால் பூக்குமோ
தொட எண்ணினால் இனிக்குமோ
பார்த்தால் கவருமோ
பார்த்த பின் மயக்கமோ
மயங்கினால் சிரிக்குமோ
சிரித்தால் சொர்கமோ
சொர்க்கம் தரையிலோ
நடக்கும் பெண்ணிலோ
பெண்ணென்றால் பூவோ

பார்க்கவேண்டும் போலிருக்கிறது
கேப்பாபுலவு வயல்வெளியை.
விட்டுவிட்டு விரிந்திருக்கும்
காடுகளை...
விடாமல் வீசிக்கொண்டிருக்கும்
வன்னிவான் காற்றை...

அவர்களின் குண்டுகளால்
சுடலையாகிப்போனது நிலம்!!
மொழியறுத்து முண்டங்களாகிச்
சிதைந்தழிந்தன சவங்கள்,